அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன.

தலைமை  நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.  இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்ட நிலையில் இன்று இறுதித் தீர்பினை வழங்குகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.