சாலை விபத்துகளில் இந்தியா முதலிடம்: அமைச்சர் கவலை| Dinamalar

புதுடில்லி: ராஜ்யசபாவில் நேற்று (மார்ச் 06), சாலை விபத்து குறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: சர்வதேச சாலை கூட்டமைப்பால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், 2020ல், நம் நாட்டில், சாலை விபத்துகளில் அதிகமானோர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. உலக நாடுகளின் பட்டியலில், அதிக உயிரிழப்புகளுடன், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதேபோல், சாலை விபத்துகளில் சிக்கி காயமடைந்தோர் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.