ஜடேஜாவை கேப்டன்சி செய்ய வழிவிடுங்கள் தோனி: முன்னாள் CSK வீரர் குற்றச்சாட்டு!


ஜடேஜாவை சுகந்திரமாக கேப்டன்சி செய்ய தோனி வழிவிட வேண்டும் என முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை அணி இதுவரை விளையாண்டு இருக்கும் மூன்று போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஜடேஜா கேப்டன்சி செய்யவில்லை, அவருக்கு பதிலாக தோனிதான் கேப்டன்சி செய்து வருகிறார் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்த கருத்தில், ஜடேஜாவிற்கு தற்போது மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது, ஆனால் அவரோ பீல்டிங்கின் போது ரிங்கிற்கு வெளியில் நின்றுக்கொண்டு இருக்கிறார் அங்கிருந்து கொண்டு எந்தவொரு கேப்டனாலும் எந்தவொரு விஷயத்தையும் கையாள முடியாது.

தோனியோ ரிங்கிற்குள் நின்றுகொண்டு பீல்ட் செட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து பணிகளையும் செய்து வருகிறார். பின்பு எதற்காக கேப்டன்சியில் இருந்து விலகுகிறேன் என்ற பெயரில் ஜடேஜாவுக்கு கேப்டன்சி கொடுக்க வேண்டும்.

ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தை காணவேண்டும் என்றால் அவர் வாய் திறந்து பேசியாக வேண்டும், அதேசமயம் தன்னுடைய சுமைகளை தோனி தோள்மீது இறக்கி வைப்பதை நிறுத்த வேண்டும்.

சென்னை அணியோ பவுலிங்கில் மிகவும் மோசமாக உள்ளது, பேட்டிங்கும் இன்னமும் கூட மேம்பாடு அடைய வேண்டும், இப்படியிருக்கையில் டோனி ஜடேஜாவிற்கு ஸ்பூனில் ஆலோசனை வழங்குவதை நிறுத்தவேண்டும்,மேலும் ஜடேஜாவை சுகந்திரமாக கேப்டன்சி செய்ய வழிவிட வேண்டும் என தோனியை ஹர்பஜன் சிங் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். 

CSK எதற்கும் அஞ்சாதது…சென்னை அணியின் கடைக்குட்டி சிங்கம் சாம் கர்ரன் நம்பிக்கை!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.