தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 8, 9 ஆகிய நாட்களில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 10, 11 ஆகிய நாட்களில் தென் தமிழகம், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகப்பட்சமாகக் கோவை மாவட்டம் வால்பாறை, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி, சிவலோகம் ஆகிய இடங்களில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.