நீட் தேர்வுக்கான கட்டணத்தை அதிகரித்தது தேசிய தேர்வு முகமை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி:நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வுக்கான கட்டணத்தை அதிகரித்து உத்தரவிட்டு உள்ளது தேசிய தேர்வு முகமை.

latest tamil news

இது குறித்து கூறப்படுவதாவது: மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் எனப்படும் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்தாண்டு நடைபெற உள்ள தேர்விற்கான கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதன்படி அனைத்து பிரிவினரும் கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.100 -ஐ அதிகமாக கட்ட வேண்டும். பொது பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.1,600 ஆகவும், இ.டபிள்யூ.எஸ், மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,500 ஆகவும், மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர், மூன்றாம் பாலினத்தவருக்கான கட்டணம் ரூ.800- ல் இருந்து 900 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

latest tamil news

மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைத்து பிரிவினருக்குமான கட்டணமாக ரூ.8,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன்வழி கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., உள்ளிட்ட கட்டணங்களை தேர்வர்கள் தனியே செலுத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.