பயில்வான் ரங்கநாதனின் மறுபக்கம்…பலரும் அறியாத தகவல்கள்..!

தற்போது யூடியூபில் மிகவும் பிரபலமானவர்களுள் ஒருவர் பயில்வான் ரங்கநாதன். பத்திரிகையாளராகவும், நடிகராகவும் வலம் வந்த பயில்வான் ரங்கநாதன் தற்போது யூடியூபில் ட்ரெண்டாகிவருகின்றார்.

பல நடிகர் மற்றும் நடிகைகளின் ரகசியங்களை கூறி பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார் பயில்வான். அதற்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் ரசிகர்கள் பலர் அவரது வீடீயோவை எதிர்பார்ப்புடன் பார்த்துவருகின்றனர். என்ன எதிர்ப்பு வந்தாலும் நான் அசரமாட்டேன் என்று வழக்கம் போல வீடீயோக்களை வெளியிட்டு வருகின்றார் பயில்வான் ரங்கநாதன்.

முதல்வர் – விஜய் சந்திப்பு…! முதல்வரிடம் விஜய் அப்படி என்ன பேசினார்?

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சினிமா துறைக்கு வருவதற்கு முன் பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்றுள்ளாராம். அதற்கான பிரத்யேகமாக பயிற்சி எடுத்து பளுதூக்குதலில் சிறந்து விளங்கிவந்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

மேலும் ஒருமுறை சென்னையில் நடந்த ஆணழகன் போட்டியில் பங்கேற்ற பயில்வான் ரங்கநாதன் மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தையும் வென்றுள்ளார். பின்பு காவல் துறையிலும் பல ஆண்டுகள் வேலைசெய்துள்ளார். இருப்பினும் சினிமா துறையின் மீது ஆர்வம் கொண்ட பயில்வான் ரங்கநாதன் காவல்துறை வேலையை ராஜினாமா செய்துவிட்டு பத்திரிகையாளராக பணிபுரிய துவங்கினார்.

.அப்போது பயில்வானுக்கு
எம்
.ஜி.ஆர் அவர்களின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்ற பயில்வான் அவரால் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். ஒரு பக்கம் பத்திரிகையாளர் மறுபக்கம் நடிகர் என பிஸியாக வலம் வந்துகொண்டிருந்தார் பயில்வான் ரங்கநாதன். மேலும் இவருக்கு எம்.ஜி.ஆர் அவர்கள்தான் பயில்வான் என்ற பெயர் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியும், ராகவா லாரன்ஸும்; குட்டி Flashback!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.