மீண்டும் உண்மை கதையில் சூர்யா: சுதா கொங்கரா வெளியிட்ட மாஸ் அப்டேட்..!

சுதா கொங்கரா இயக்கத்தில்
சூர்யா
நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான படம் ‘
சூரரைப் போற்று
‘. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த இந்தப்படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்களும் பார்த்து பாராட்டினார்கள். சூர்யாவின் கம்பேக்காக இந்தப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

‘சூரரைப் போற்று’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியானது. அண்மையில் ஓடிடியில் வெளியான சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்திற்கான டெஸ்ட் ஷுட்டிங்கில் கலந்து கொண்டார் சூர்யா.

முதலமைச்சருடன் சந்திப்பு.. மக்கள் இயக்கத்தினருக்கு எச்சரிக்கை: விஜய்..!

இதனிடையில்
பாலா
இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் துவங்கியது. 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார்.
சூர்யா 41
என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதனையடுத்து மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இந்நிலையில் இந்தப்படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சுதா கொங்கரா, பெரிய பட்ஜெட்டில் இந்தப்படம் உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ‘சூரரைப் போற்று’ படம் போல பயோ பிக்காக இல்லாமல் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகவுள்ள படம் என்றும் தெரிவித்துள்ளார். சூர்யா 41, வாடிவாசல் படங்களுக்கு பிறகு இந்தப்படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வசூலில் பாகுபலி படத்தையே மிஞ்சிய RRR – இத்தனை கோடியா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.