முக்கிய தலைவர்களுக்கு புல்லட் புரூப் வாகனங்கள்?| Dinamalar

புதுடில்லி :நாட்டின் முக்கிய தலைவர்களின் பாதுகாப்புக்கு, குண்டு துளைக்காத, ‘புல்லட் புரூப்’ வாகனங்களை வாங்க, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சி.ஆர்.பி.எப்., கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்., தலைவர் சோனியா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பல வி.வி.ஐ.பி.,க்களுக்கும் சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வி.வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், குண்டு துளைக்காத, 23 புல்லட் புரூப் வாகனங்களை வாங்க, மத்திய உள்துறையிடம் சி.ஆர்.பி.எப்., கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள வாகனங்கள், புல்லட் புரூப் வாகனங்களாக மாற்றி அமைக்கப்பட்டது என்றும், முன் இருக்கை மட்டும் குண்டு துளைக்காத வசதி உள்ளவை என்றும், அவை வாங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதன் திறன் குறைந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த கோரிக்கை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு கூட்டங்களை நடத்தி உள்ளதாகவும், இதற்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளதாவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.