ரஷ்ய தூதரகம் மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்த சம்பவம்.. காரில் இருந்த கருவியே தீ விபத்துக்கு காரணம் – அதிகாரிகள்

ருமேனியாவில் உள்ள ரஷ்ய தூதரக நுழைவு வாயிலில் கார் மோதி தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில், காரில் இருந்த மர்ம கருவியால் தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய தூதரக கேட்டின் மீது வேகமாக வந்த கார் மோதி தீப்பிடித்து எரிந்தது. வாகன ஓட்டி தீயில் கருகி உயிரிழந்தார். தூதரகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரித்து வரும் அதிகாரிகள், மோதிய வேகத்தில் காரில் இருந்த கருவியை இயக்கி ஓட்டுநர் தீயை உருவாக்கி இருக்கலாம் எனக் கூறினர்.

உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் முழு விபரம் விரைவில் தெரிய வரும் என தெரிவித்தனர். 

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.