‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’.. அதே பேய் பங்களா.. மீண்டும் திகில் கதையை இயக்கும் ராம்பாலா

இயக்குநர் ராம்பாலா இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

’தில்லுக்கு துட்டு’, ’தில்லுக்கு துட்டு 2’ படங்களை இயக்கி கவனம் ஈர்த்த ராம்பாலா இயக்கத்தில் சமீபத்தில் கடந்தஏப்ரல் 1 ஆம் தேதி ‘இடியட்’ வெளியானது. தனது வழக்கமான திகில் ப்ளஸ் காமெடி பாணியிலேயே மூன்று படங்களையும் உருவாக்கியிருந்தார் ராம்பாலா. மூன்றாவதாக இயக்கிய ‘இடியட்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், தனது நான்கவது படத்தினையும் திகில் கதைக்களத்திலேயே உருவாக்கவுள்ளார். படத்தின் போஸ்டரில் இதற்கு முன்னர் இயக்கிய மூன்று படங்களைப் போலவே, பேய் பங்களா இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

image

image

image

image

‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ என்று ’மாநாடு’ படத்தின் டயலாக்கையே தலைப்பாக்கியுள்ள இப்படத்தில் சந்திரமெளலி, மீனாக்‌ஷி, ரெபா மோனிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். செவிலோ ராஜா ஒளிப்பதிவை மேற்கொள்ள, சந்தோஷ் தயாநிதி மற்றும் கே.சி பாலசாரங்கன் இசையமைக்கின்றனர். ரகுநாதன் பி.எஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.