‘டேஞ்சரஸ்’-ஐ திரையரங்கில் வெளியிட மறுப்பதற்கு என்ன காரணம்?- ராம்கோபால் வர்மா விளக்கம்

இந்தி, தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநரான ராம்கோபால் வர்மா, தன்பாலின ஈர்ப்பாயாளர் கதையை மையமாக வைத்து உருவாக்கியுள்ள ‘ஹாத்ரா’ (டேஞ்சரஸ்) திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட, அதன் உரிமையாளர்கள் மறுப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

இந்திய சினிமா இயக்குநர்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து பேசுவது, படம் எடுப்பது ஆகியவற்றில் பரபரப்பை ஏற்படுத்தும் முக்கிய நபராக இருப்பவர் ராம்கோபால் வர்மா. இவர், தற்போது ஓரின சேர்க்கையாளர் கதையை மையமாக வைத்து லெஸ்பியன் க்ரைம் திரில்லர் கொண்ட ‘ஹாத்ரா’ (டேஞ்சரஸ்) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நைனா கங்குலி, அப்சரா ராணி, ராஜ்பால் யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘காதல் காதல்தான்’ என்ற பெயரில் தமிழில் உருவாகியுள்ளது. 8-ம் தேதி வெளியாக இருந்தநிலையில், இந்தப் படத்தை வெளியிட மல்டி பிளெக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பதாக, இந்தப் படத்தின் இயக்குநர் ராம்கோபால் வர்மா தெரிவித்திருந்தார்.

image

மேலும், 377-வது சட்டப்பிரிவு உச்சநீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டப் பிறகு, இரு பெண்கள் சம்பந்தப்பட்ட கதையை எடுத்திருப்பதாக ராம்கோபால் வர்மா கூறியிருந்தார். இந்நிலையில், ஏன் இந்தப் படத்தை வெளியிட திரையரங்குகள் மறுக்கின்றன என அவர் விளக்கியுள்ளார்.

அதில், “இருபெண்கள் சம்பந்தப்பட்ட படம் என்பதால் திரையரங்குகள் படத்தை வெளியிட மறுக்கின்றன. திரையரங்குகள் மட்டுமில்லாது ஓரின சேர்க்கையாளர் சமூகமே இந்தப் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆண்-பெண் சம்பந்தப்பட்ட படங்களை போன்றுதான், இந்தப் படத்தையும் இயக்கியுள்ளேன்.

இந்தப் படம் குறித்து திரையரங்குகள் விளக்கம் கேட்கின்றன. ஆண் – பெண் இடையேயான உறவு குறித்த படத்திற்கு விளக்கம் கொடுக்க தேவையில்லாதபோது, ஏன் இந்தப் படத்திற்கு மற்றும் விளக்கம் கொடுக்க வேண்டும். நிச்சயமாக இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிட முயற்சி செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.