தனுஷ் இல்ல 'அவரை' பற்றி ஐஸ்வர்யாவிடம் கேட்கும் ரசிகர்கள்

காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு தன் கவனத்தை எல்லாம் கெரியர் பக்கம் திருப்பிவிட்டார்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
. பயணி என்கிற காதல் பாடல் வீடியோவை இயக்கி, தயாரித்து வெளியிட்டார்.

இதையடுத்து ஓ சாத்தி சல் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். மேலும் பயணி வீடியோவை தயாரித்த பிரேர்னா அரோராவுக்காக ஒரு இந்தி படத்தை இயக்கவிருக்கிறார். இது தவிர்த்து ராகவா லாரன்ஸின் துர்கா படத்தை இயக்கப் போகிறார்.

இந்நிலையில் தன் தங்கை சவுந்தர்யாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார் ஐஸ்வர்யா. அதை பார்த்த ரஜினி ரசிகர்களோ, புகைப்படம் வெளியிடுவது எல்லாம் சரி. தலைவரை சந்தோஷமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்ே.

சில குசும்புக்கார ரசிகர்களோ, சிம்புவை வைத்து எப்பொழுது படம் பண்ணுவீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தனுஷை பழிவாங்க சிம்புவை வைத்து படம் இயக்கவிருக்கிறார் ஐஸ்வர்யா என தகவல் வெளியாகி தீயாக பரவியது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று
சிம்பு
தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.