நடிகை பலாத்கார வழக்கு: விசாரணைக்கு ஆஜராக காவ்யா மறுப்பு : மஞ்சு வாரியரிடம் திடீர் விசாரணை

மலையாள முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். இந்த நிலையில் விசாரணை அதிகாரியை கொல்ல திட்டமிட்டதாக மற்றொரு வழக்கு திலீப் மீது தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சில ஆடியோக்கள் வெளியானது.

இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக நடிகையும், திலீப்பின் இரண்டாவது மனைவியுமான காவ்யாக மாதவன் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே அவர் விசாரணைக்கு இன்று (ஏப்11) வரவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த சம்மனுக்கு பதில் அளித்துள்ள காவ்யா மாதவன், தான் தற்போது சொந்த பணி காரணமாக சென்னையில் இருப்பதாகவும், இதனால் ஆஜராக இயலாது என்றும், வருகிற 13ம் தேதி என் வீட்டில் விசாரணையை வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் தீலீப்பின் முன்னாள் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியரிடம் நேற்று விசாரணை அதிகாரிகள் திடீரென விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் கிடைத்துள்ள ஆடியோ ஆதாரங்கள் உண்மைதானா என்பதை அவரிடம் விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.