பிரபல நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்…! எல்லை மீறிய அதிகாரிகள்…!

பிரபு தேவா
பாலிவுட் நாயகன்சல்மான் கானை வைத்து இயக்கிய
வான்டட்
படத்தில் நாயகியாக வந்தஆயிஷா தாகியிடன் .சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா பாலிவுட்டில்இயக்கிய வான்டட் படத்தில்
சல்மான்
கானுடன் ஜோடியாக நடித்தவர்பிரபல நடிகை
ஆயிஷா தாகி
. 2004ஆம் ஆண்டு இந்தியில் வெளியான டார்சன் தி வொண்டர் கார் என்ற தனது அறிமுகப் படத்திலேயே மிகவும் பேசப்பட்டு, பல விருதுகளை வாங்கியுள்ளார்.

திருமணமான நடிகருடன் தொடர்பு: உண்மையை சொன்ன விஜய் ஹீரோயின்

இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து, வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த இவர்மார்பகங்களை பெரிதாக்க செய்து கொண்ட அறுவைச் சிகிச்சையால் பெரிதும் கவனிக்கப்பட்ட நடிகையானார்.

கடந்த 2009 -ம் ஆண்டு
பர்ஹான் ஆஷ்மி
என்பவரை திருமணம் செய்து கொண்ட பின்னர் திரைப்படங்களிலிருந்து ஒதுங்கி இருந்த இவர் பின்னர் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களாலும் பதிவுகளாலும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும்நடிகை ஆயிஷா தாகியாவுக்கு அண்மையில்கடந்த 2018-ம் ஆண்டுதொடர்ந்து மிரட்டல் மெசேஜ்கள் வருவதாக, அவரது கணவர் பர்ஹான் ஆஷ்மி தெரிவித்திருந்தார்..

தொழில்முறை நண்பர் ஒருவர் மீது காவல்துறையில் புகார் அளித்ததில் இருந்தே இதுபோன்ற மிரட்டல் மெசேஜ்கள் வருவதாகவும், ஆயிஷா தாகியா மட்டுமின்றி, தனது தாய் மற்றும் சகோதரிக்கும் கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை புகாரை கொடுத்துள்ளார் தாகியாவின் கணவர் ஃபர்ஹான் ஆஸ்மி மீண்டும் ஒரு பகீர் புகார் அளித்துள்ளார். சமீபத்தில்
ட்வீட்
செய்துள்ள ஃபர்ஹான் ஆஸ்மி, கோவா விமான நிலையத்தில் பணியில் இருந்த மத்திய
தொழில் பாதுகாப்புப் படை
அதிகாரிகளால் தனது மனைவி துன்புறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

அதோடு அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதமேந்திய ஆண் அதிகாரி ஒருவர் ‘உடல் ரீதியாகத் தொட்டு’ தனது மனைவியை வேறு வரிசையில் நிற்கச் சொன்னதாக அவர் கூறினார். மேலும் மற்ற அதிகாரி பின்னர் சோதனை செய்யும் போது பாலியல் ரீதியாக துன்புறுத்தியாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தன் மனைவியை உடல் ரீதியாகத் தொட்டுச் சொல்ல முயன்றபோது வாக்குவாதம் தொடங்கியதாகவும், அவர்கள் தங்களை தவறாக நடத்தியதாகவும் கூறியுள்ளார்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.