மணிப்பாலில் தொடர் விபத்து டூ-வீலர், மூன்று கார்கள் சேதம்| Dinamalar

உடுப்பி : உடுப்பி மணிப்பாலில் நிகழ்ந்த தொடர் விபத்தில், இரு சக்கர வாகனம், மூன்று கார்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக பயணியர், ஓட்டுனர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.உடுப்பி மணிப்பாலில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ‘இன்னோவா’ கார் ஒன்று, சிண்டிகேட் சதுக்கத்திலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.போலார் பியர் அருகே உள்ள டிவைடரில், முன்னால் சென்று கொண்டிருந்த பைக் ஓட்டுனர் ஒருவர் திடீரென ‘யு -டர்ன்’ எடுத்தார்.

அவர் மீது மோதாமல் இருக்க, இன்னோவா கார், பிரேக் போட்டு சாலையோரம் இருந்த கால்வாயில் இறங்கியது.இதை பார்த்த அப்பகுதியினர், மற்ற வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு, காரில் சிக்கியவர்களை மீட்க சென்றனர்.அப்போது அதே சாலையில், வேகமாக வந்த இன்னொரு கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வீட்டின் சுவர் மீது மோதி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார், ஒரு பைக் மீது மோதியது.உடனடியாக, விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மணிப்பால் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.