'மோடிக்கு தைரியம் இருக்கா?' – 24 மணி நேரம் கெடு விதித்த கே.சி.ஆர்

பிரதமர் நரேந்திர மோடிக்கு தைரியம் இருந்தால், என்னை கைது செய்யட்டும் என, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் சவால் விடுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து, 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரி, அம்மாநில முதலமைச்சரும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் தலைமையில், அமைச்சர்கள் உள்ளிட்டோர், தலைநகர் டெல்லியில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடிக்கு தைரியம் இருந்தால், என்னை கைது செய்யட்டும். நான் பிரதமரிடமும், மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடமும் கூப்பிய கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து எங்களின் உணவு தானியங்களை வாங்குங்கள். நான் உங்களுக்கு 24 மணி நேரம் தருகிறேன். அதன் பிறகு, நாங்கள் எங்கள் முடிவை எடுப்போம்.

ராமர் பிறக்கலைன்னா எதை வச்சு பிரச்சினை பண்ணிருப்பீங்க.. உத்தவ் தாக்கரே பொளேர் கேள்வி!

தெலங்கானா மாநிலம் தனது உரிமையைக் கோருகிறது. புதிய விவசாயக் கொள்கையை பிரதமர் நரேந்திர
மோடி
உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு நாங்களும் ஒத்துழைப்பு அளிப்போம். நீங்கள் அதைச் செய்யாவிட்டால், ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்படுவீர்கள். மத்தியில் புதிய அரசு அமைந்தவுடன், ஒருங்கிணைந்த விவசாயக் கொள்கை உருவாக்கப்படும். அரசாங்கத்தை கவிழ்க்கும் வல்லமை கொண்ட விவசாயிகளின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள். விவசாயிகள் பிச்சைக்காரர்கள் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.