7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் பொன்முடி மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது குறித்து சட்டப்பேரவையில், அமைச்சர் பொன்முடி மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் 2 ஆண்டுகளில் 800 மாணவர்கள் மருத்துவர்கள் ஆகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் அன்பழகன் பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் பொன்முடி, அப்போதைய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டானின் கவர்னர் அலுவலகத்தின் முன்பு நடத்திய போராட்டத்தின் காரணமாகத்தான் அந்த தீர்மானத்தில் ஆளுநர் கையொப்பமிட்டார் என கூறினார்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் கையொப்பம் இட கால தாமதம் செய்த காரணத்தால் முதலமைச்சருக்கு இருக்கக் கூடிய அதிகாரத்தை பயன்படுத்தி தானே கையொப்பமிட்டு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததாக கூறினார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.