BREAKING: பாக். புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு!

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானுக்கு அளித்து வந்த ஆதரவை, கூட்டணி கட்சிகள் விலக்கிக் கொண்டன. மேலும்,
இம்ரான் கான்
மீது அவரது கட்சி எம்பிக்களும் அதிருப்தியில் இருந்ததால் அவர்களில் ஒருசிலர் ஆதரவை திரும்பப் பெற்றனர்.

இதை அடுத்து, பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் இம்ரான் கான் பெரும்பான்மை இழந்ததை அடுத்து அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானிலும் ஒரு “நரேந்திர மோடி”.. முதல்வர் டூ பிரதமர்.. ஷபாஸ் ஷெரீப்!

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப்பை நியமிக்கும்படி, எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில் இன்று, தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நாடாளுமன்றத்தில், புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக எம்பிக்கள் ஒன்று கூடினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷெபாப் ஷெரீப் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.