அச்சுறுத்தும் XE வகை கொரோனா – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

புதிய வகை கொரோனா பரவல் குறித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த, அதிகாரிகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஒமைக்ரான் தொற்றின் திரிபான XE வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வகை கொரோனா தொற்று அதி வேகமாகப் பரவக் கூடியது என்று, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, இந்தியாவிலும் புதிய XE வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், XE வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகுமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று, டெல்லியில், பாஜகவைச் சேர்ந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதிய வகை கொரோனா குறித்து, சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், மரபணு மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்று குறித்து, ஆய்வு செய்யவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருந்துகள் கிடைப்பதை தொடர்ந்து ஆய்வு செய்யுமாறும் அதிகாரிகளை, அமைச்சர் மன்சுக் மாண்வியா கேட்டுக் கொண்டார். கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும், தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்தவும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.