அந்த மாதிரி சீன்களில் நடிக்க ஆதி தடை போடமாட்டார்…! காதல் வாழ்க்கையை ஷேர் செய்த நிக்கி…!

நடிகை
நிக்கி
கல்ராணி 2014 ஆம் ஆண்டு வெளியான
டார்லிங்
படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார்.தமிழில்
இடியட்
என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

நடிகை நிக்கி கல்ராணி, யாகாவராயினும் நா காக்க,
கோ2
,
கலகலப்பு-2
, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகத நாணயம், ஹர ஹர மகாதேவகி,
ராஜவம்சம்
போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இது தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா இப்பெல்லாம் ‘அது’ இல்லாம இருக்குறது இல்லை..!

யாகாவராயினும் நாகாக்க படத்தில் ஆதியுடன் இணைந்து நடித்த போதே இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், காதல் விவகாரம் குறித்து இருவரும் வாய் திறக்காமல் இருந்தனர். இந்த ஜோடிக்கு திடீரென நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், நிக்கி கல்ராணி அளித்துள்ள பேட்டியில்,
ஆதி
என்னை மிகவும் நேசிக்கிறார், திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை, அந்த ஆசைக்கு ஆதி நிச்சயம் தடை போடமாட்டார், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார். வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் நிக்கி கல்ராணி கூறினார்.

நிக்கி கல்ராணி, இயக்குநர்
சுசீந்திரன்
இயக்கத்தில் உருவாகி வரும்
சிவுடு
திரைப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது. மேலும், ஆதி தெலுங்கில் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் ‘கிளாப்’ மற்றும் ‘தி வாரியர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகே இவர்களின் திருமணம் தேதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.