அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 16 பேர் படுகாயம்

நியூயார்க்:நியூயார்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் சன்செட் பார்க் சுரங்க ரயில் நிலையத்தில், நேற்று அதிகாலை துப்பாக்கி சூடு நடந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயங்களுடன் பிளாட்பார்மில் கிடந்த 16 பேரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர் போல் உடையணிந்திருந்த ஒருவர், துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. இது பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.