குற்றப்பிரிவு போலீசாருக்கு புதிய ஜாக்கெட்| Dinamalar

பெங்களூரு, : பெங்களூரில் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்கும் சி.சி.பி., போலீசாருக்கு, தனி ஜாக்கெட் அளிக்கப்பட்டுள்ளது. இதையணிந்தே அவர்கள் பணியாற்றுவர்.ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு படை போலீசார், உடலில் தனி ஜாக்கெட் அணிந்து பணியாற்றுகின்றனர். இதே போன்று நகர சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கும் வழங்க, போலீஸ் துறை திட்டமிட்டது.இவர்களுக்கான தனி ஜாக்கெட்களை, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், நேற்று வழங்கினார்.சி.சி.பி., இணை கமிஷனர் ரமேஷ் குப்தா கூறுகையில், ”குற்ற வழக்குகளின் விசாரணையின் போது, இந்த ஜாக்கெட்டை அணிவர். இதன் மூலம் சி.சி.பி., போலீசாரை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும்,” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.