தனுஷுக்கு மிகவும் பிடித்த 'அவரை' சந்தித்த ஐஸ்வர்யா: வைரலாகும் போட்டோஸ்..!

தனுஷுடனான பிரிவிற்கு பின்னர் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
. அதே போல் அவர் எந்த பதிவுகள் பகிர்ந்தாலும் அவை டிரெண்டிங்கில் இயம் பிடித்து விடுகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

விவாகரத்து அறிவிப்பிற்கு பின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா. அண்மையில் இவரின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் வெளியானது. இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஐஸ்வர்யா புதிய படம் ஒன்று இயக்குவார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நேரடியாக பாலிவுட்டில் இயக்குனராக தடம் பதிக்கவுள்ளார்.

மெஹா திட்டத்துடன் களமிறங்கும் ‘ஏகே 61’ படக்குழு: வெளியான மாஸ் தகவல்…!

இந்நிலையில் திடீரென இசைஞானி இளையராஜாவை சந்தித்து, அவர் ஸ்டூடியோவில் இருக்கும் போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. அதோடு, எனது திங்கட்கிழமை பகல் பொழுது
இளையராஜா
அங்கிளின் இசையும், மந்திர சக்தியும் இல்லாமல் இருந்தால் இனிமையாகி இருக்காது கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற இசைஞானியின் ‘ராக் வித் ராஜா’ நிகழ்ச்சியில் இளையராஜாவின் தீவிர ரசிகரான
தனுஷ்
தனது இரு மகன்களுடன் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா. இது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது இசைஞானியை, ஐஸ்வர்யா சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தளபதி 66” அப்டேட்; ரசிகர்கள் ஹேப்பி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.