திடீரென வெடித்துச் சிதறிய மின் வயர்கள்: அச்சத்துடன் சாலையில் தஞ்சமடைந்த மக்கள்

ஆவடியில் உயர் அழுத்த மின்சார கேபிள்கள் தீபாவளி பட்டாசுபோல் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட நந்தவனமேட்டூர் திருவள்ளூர் தெருவில் நேற்றிரவு மின்கசிவு காரணமாக திடீரென மின்சார வயரில் தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென மின் கம்பத்தில் உள்ள அனைத்து வயர்களும் எரிய ஆரம்பித்தது. இதையடுத்து அதிக சத்தத்துடன் தீபாவளி பட்டாசு போல் தீப்பொறியுடன் எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செய்வதறியாது வீட்டை விட்டு வெளியேறி சாலையில் குவிந்தனர்.
image
உடனடியாக இதுகுறித்து ஆவடி போலீசார், மின்சார வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவர்கள் வருவதற்குள் அப்பகுதி பொதுமக்களில் ஒருவர் டிரான்ஸ்பார்மரில் இருந்து வரும் இணைப்பை துண்டித்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மின்சார வாரிய அதிகாரிகள் சேதமடைந்த ஒயர்களை சீர் செய்து மீண்டும் மின் சேவை தரும் பணிகளில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.