திருச்சியில் கோவில் கோபுரத்தில் இருந்த பழமையான ஐம்பொன் கலசங்கள் திருட்டு.!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கோவில் ஒன்றின் கோபுரத்தில் இருந்த பழமையான ஐம்பொன் கலசங்களை மர்ம நபர்கள் இரவோடு இரவாக திருடிச்சென்றுள்ளனர்.

மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள எல்லையம்மன் கோவில் கோபுரத்தின் மீது 5 கலசங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் பழுதடைந்த ஒரு கலசத்தை 5 மாதங்களுக்கு முன்னர் கிராம மக்களே அகற்றி எடுத்து வைத்த நிலையில், மீதமிருந்த 4 கலசங்களில் மூன்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும், ஒரு கலசத்தை அகற்ற முயற்சி செய்தும் அதை எடுக்க முடியாததால் அதை அப்படியே விட்டுவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.