திருவள்ளூரில் மின்சார கம்பத்தில் உள்ள மின் வயர்களில் திடீரென தீ பற்றி வெடித்து சிதறி விபத்து.!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மின்சார கம்பத்தில் உள்ள மின் வயர்களில் திடீரென தீ பற்றி விபத்து ஏற்பட்டது. நந்தனவன மேட்டூர் பகுதியில் உள்ள மின்சார கம்பத்தில் கணநேரத்தில் பற்றிய தீ மளமளவென அனைத்து வயர்களிலும் பரவி தீப்பொறிகளுடன் பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறி எரிந்தது.

அதிச்சியடைந்த அப்பகுதிமக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி சாலையில் குவிந்தனர். இதுகுறித்து போலீசார், மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த மின்சார வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின் வயர்களை சீர் செய்து மீண்டும் மின் சேவை தொடரும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.