நீண்ட நாளைக்கு பிறகு சமந்தாவை சந்தித்த சதீஷ்

சமந்தாவை பொறுத்தவரை தற்போது தெலுங்கு திரையுலகில் பிசியாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்து வரும் ஒரே படமான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த படப்பிடிப்பு தொடர்பாக அவ்வப்போது சென்னை வந்து சென்றார் சமந்தா. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சமந்தாவை சந்தித்த நடிகர் சதீஷ் அவருடன் எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு கத்தி பட நினைவுகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் சமந்தா. அந்த படத்தில் விஜய்யின் நண்பனாக நடித்து இருந்த சதீஷூம் சமந்தாவுடன் பல காட்சிகளில் இணைந்து நடித்து இருந்தார். அதன்பிறகு நீண்ட நாளைக்கு பின் சமந்தாவை இப்போதுதான் சந்தித்துள்ளதாக கூறியுள்ள சதீஷ், கத்தி பட நாட்களை மிஸ் பண்ணுவதாக கூறியதுடன் வரும் காலத்தில் சமந்தா நடிக்க உள்ள படங்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.