மே.வங்கத்தில் வாக்குப்பதிவின்போது பயங்கர வன்முறை..! பாதுகாப்பு படையினரை மூங்கில் கம்பால் தாக்கிய கும்பல்

மேற்கு வங்கத்தில் இன்று இடைத் தேர்தல் நடைபெறும் அசன்சோல் மக்களவை தொகுதியில் வன்முறை வெடித்ததால் பதற்றம் நிலவுகிறது.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் மீது மூங்கில் கம்புகளைக் கொண்டு மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

#WATCH | West Bengal: Violence breaks out in Asansol where bypoll voting to Lok Sabha seat is underway. Agnimitra Paul, who is BJP candidate for the seat alleges, "TMC people attacked us, hurled stones at our convoy. Police doing nothing… " pic.twitter.com/pdQGZWF57h

— ANI (@ANI) April 12, 2022

“>

இதுபோல, அசன்சோல் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் அக்னிமித்ரா சென்ற கார் மீதும் கற்கள் வீசப்பட்டன.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகவும், மாநில போலீசார் வேடிக்கை பார்ப்பதாகவும் அக்னி மித்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.