ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை முதலில் ஐரோப்பியா நிறுத்த அறிவுறுத்தல்.!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த முதலில் ஐரோப்பியாவை அறிவுறுத்துமாறு கூறிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், இந்தியா ஒரு மாதத்திற்கு இறக்குமதி செய்யும் எண்ணெய் அளவை ஐரோப்பியா ஒரே நாளில் வாங்குவதாக கூறினார்.

இந்தியா, அமெரிக்கா வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை இடையிலான 2+2 ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

உக்ரைன் புச்சா நகரில் நிகழ்த்தப்பட்ட பொது மக்கள் படுகொலை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த இந்திய நாடாளுமன்றம் மற்றும் ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதியாக இருந்ததை தான் கவனித்ததாக பிளிங்கென் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நட்பு நாடுகள் ரஷ்யாவில் இருந்து எரிசக்தி இறக்குமதியை குறைக்க வேண்டும் என பிளிங்கென் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.