உக்ரைன் பத்திரிகையாளர்களை சிறை வைக்கும் ரஷ்யா- உக்ரைன் துணை பிரதமர் குற்றச்சாட்டு| Dinamalar

கீவ்: உக்ரைன் பத்திரிகையாளர்களை ரஷ்யா சிறை வைத்துள்ளதாக உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உக்ரைன் துணை பிரதமர் முன்னதாக ரஷ்யாமீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் உக்ரைன் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியலமைப்பு நிர்வாகிகள், குடிமக்கள் உள்ளிட்ட பலரை ரஷ்ய தங்களது சிறையில் அடைத்து உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

latest tamil news

ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. உக்ரைனின் குற்றச்சாட்டு உண்மையானதா என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தற்போது உக்ரைன்-ரஷ்ய போர் 50-வது நாளை நெருங்கிவரும் நிலையில் போர் வீரியம் இன்னும் அதிகம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.