கிழக்கு,ஊவா,வடக்கு மாகாணங்களில் 75  மி.மீ. க்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2022 ஏப்ரல் 13ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாட்டை விட்டு விலகி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு , ஊவா ,வடக்கு மற்றும் வடமத்தி  மாகாணங்களில் சில இடங்களில் 75  மி.மீ க்கும் மேற்பட்ட மழை பெய்யக்கூடும்..

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை அது இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (13ஆம் திகதி) தாயிலியன் குடியிருப்பு (மன்னார் மாவட்டம்)இ கனகராயன்குளம்இ நெடுங்கேணி (வவுனியா மாவட்டம்) மற்றும் நட்டாங்கண்டல் (முல்லைத்தீவு மாவட்டம்) ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.