இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பே இல்லை-கார்த்திக் சிதம்பரம்.!

பிரதமர் மோடியும், நிர்மலா சீதாராமனும் பதவியில் இருக்கும் வரை இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பே இல்லை என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தங்களது பொறுப்பில் இருக்கும் வரை இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காமல் இருக்கும் வரை விலைவாசி குறையாது என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பெட்ரோல் விலையை குறைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.