இந்தியாவுக்குள் நுழையும்.. அமெரிக்க போர்க் கப்பல்கள்.. விரைவில்!

எதிர்காலத்தில் அமெரிக்க போர்க்கப்பல்களை நமது நாட்டு துறைமுகங்களில் அடிக்கடி பார்க்கும் நிலை ஏற்படலாம். இதுதொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஏற்படவுள்ள ஒப்பந்தம் இதை உறுதி செய்கிறது.

அமெரிக்க போர்க்கப்பல்களை பராமரிக்கும் மற்றும் பழுது பார்க்கும் வேலைகளை நமது நாட்டு கப்பல் கட்டும் தளங்கள் மேற்கொள்ளவுள்ளன. இதுதொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையெழுத்தாகவுள்ளது. கடந்த பத்து வருடமாகவே இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பரிவர்த்தனைகள் நடந்து வருகின்றன. அந்த வரிசையில் இந்த போர்க்கப்பல் ஒப்பந்தமும் சேரவுள்ளது.

இந்த புதிய உடன்படிக்கையானது, இரு நாடுகளின் வர்த்தக உறவை வலுப்படுத்துவதோடு, இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கு கூடுதல் வேலைகளையும் கொண்டு வர உதவும். இதுதொடர்பான முடிவு அமெரிக்காவில் நடைபெற்ற இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போது ஏற்பட்டது.

அடுத்தடுத்து சர்ச்சை.. சிக்கிய கர்நாடக அமைச்சர்.. தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு!

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும் இந்தியத் தரப்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

இந்த முடிவானது, ஒப்பந்தமாக மாறும்போது இந்திய கடல் எல்லைக்குள் அடிக்கடி அமெரிக்க போர்க்கப்பல்களைப் பார்க்க முடியும். தற்போது இந்திய கடல் எல்லைக்குள் அமெரிக்க போர்க்கப்பல்கள் வருவது மிக மிக அரிதான ஒன்றாக உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் அதிக அளவிலான அமெரிக்க போர்க்கப்பல்களை இந்திய கடலில் பார்க்க முடியும்.

இந்தியாவின் இந்த முடிவுக்கு ரஷ்யா என்ன சொல்லப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் ரஷ்யாவை
இந்தியா
வேறு வகையில் சமாதானப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.