இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும் – சற்றுமுன் சட்டபேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.!

தரம் என்றால் அது ஆவின் தான். இனி ரேசன் கடைகளிலும் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை மானிய கோரிக்கையின் போது, பால்வளத் துறை அமைச்சர் நாசர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், 

தரம் என்றால் அது ஆவின் தான்; இனி ரேசன் கடைகளிலும் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், சென்னையில் ஆவின் பால் விற்பனை நாளொன்று 1 லட்சம் லிட்டர் அதிகரித்திருப்பதாக பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பொருட்களை மொரீசியஸ், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.