ஏழைகளுக்கு வீட்டை தானமாக கொடுத்த நடிகர் சூர்யா…! கொண்டாடும் ரசிகர்கள்…!

சூர்யா
நடிப்பில் ‘புது’ படமொன்றை
பாலா
டைரக்ட் செய்து வருகிறார். ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். சூர்யாவின் 41-வது படமான இதை சூர்யாவின்
2 டி
என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக
கீர்த்தி ஷெட்டி
நடிக்கிறார். மற்றொரு நாயகியாக, மலையாள நடிகை
மமிதா பைஜூ
நடிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ்
குமார் இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதலில் ராமேஸ்வரத்தில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்ட இந்த
ஷுட்டிங்
, பிறகு கன்னியாகுமரிக்கு மாற்றப்பட்டது.

என் தலைவன் வந்துட்டாருடா..!பீஸ்ட் FDFSல் கூல் சுரேஷ் செய்த தரமான சம்பவம்..!

இந்த படத்தில் சூர்யா காது கேளாத, வாய் பேச முடியாத மீனவர் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சூர்யாவின் மனைவியாக ஜோதிகா நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தின் ஷுட்டிங்கை மூன்று மாதங்களில் நடத்தி முடிக்க சூர்யா கூறி இருப்பதால் படுவேகமாக ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

சூர்யா 41 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்று வெளியிட பாலா திட்டமிட்டுள்ளாராம். படத்தின் டைட்டில் ஒற்றை வார்த்தையில் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் மீனவர்கள் சார்ந்ததாக இந்த டைட்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அங்கு நடுக்கடலில் கடந்த சில நாட்களாக ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்துக்காக, கன்னியாகுமரி அருகே மூன்று வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு விரைவில் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்ததும் அந்த வீடுகளை கன்னியாகுமரியில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த ஏழைகளுக்கு வழங்க சூர்யா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா ஏற்கனவே தான் நடத்தும்
அகரம்
ஃபவுண்டேஷன் மூலம் ஏராளமான மாணவர்களின் படிப்பிற்கு உதவி செய்து வருகிறார். அதே போல் ஜெய்பீம் படத்தின் மூலம் கிடைத்த பணத்தையும் பழங்குடியின மக்களின் நல வாழ்விற்காக தமிழக அரசிடம் வழங்கினார்.தற்போது ஷுட்டிங்கிற்காக கட்டப்பட்டாலும் அந்த வீடுகளை வீணடிக்காமல் ஏழைகளுக்கு வழங்க முடிவு செய்திருக்கும் சூர்யாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.