கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் போலீசார் கைது

திருவாரூர் விளமல் பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

டாஸ்மாக்கில் கள்ள 500 ரூபாய் நோட்டை வழங்கியவர் குறித்து கடை ஊழியர்கள் அளித்த புகாரில் போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருளிடம் நடத்திய விசாரணையில் 5 பேர் சேர்ந்து கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.