தடுப்பூசி பணியில் வேகம் தேவை மத்திய சுகாதார அமைச்சர் உத்தரவு| Dinamalar

புதுடில்லி:உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான் எக்ஸ்.இ.,’ பாதிப்பு சில இடங்களில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், ‘தடுப்பூசி செலுத்தும் பணி முழுமை அடையும் வகையில், அதை விரைவுபடுத்த வேண்டும்’ என, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டு உள்ளார்.
கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் எக்ஸ்.இ., வகை வைரஸ் பாதிப்பு சில இடங்களில் கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சர்மன்சுக் மாண்டவியா தலைமையில் நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம், டில்லியில் நடைபெற்றது.
அப்போது, உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தீவிரமாக கண்காணிக்கவும், நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி முழுமை அடையும் வகையில், அதை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், நிடி ஆயோக் உறுப்பினர்வி.கே.பால், மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன்,’எய்ம்ஸ்’ இயக்குனர் ரன்தீப் குலேரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.