மத்திய அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதிய ஓபிஎஸ்.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.!

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், 23.03.2022 அன்று தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கைது செய்த மற்றொரு கொடூரமான சம்பவத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

ஏழை மீனவர்களை விடுவிக்க ஜாமீன் தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை நீதிமன்றத்தின் இந்தச் செயல் தமிழக மீனவர்களுக்குத் தண்டனை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுமோ என்ற அச்சத்தில் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க தலா ஒரு கோடி ரூபாய் ஜாமீன் தொகையாக நிர்ணயித்திருப்பது நெருப்பில் எரியூட்டுகிறது. எனவே தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.