பெங்களூரு : ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நிறுவனம், ஹூப்பள்ளி விமான நிலையத்திலிருந்து, தினமும் 14 மணி நேரம் ஏர் டாக்சி போக்குவரத்தை நேற்று துவங்கியுள்ளது.ஹரியானாவை சேர்ந்த விமான சேவை நிறுவனம், ஹூப்பள்ளி விமான நிலையத்திலிருந்து, ஏர் டாக்சி போக்குவரத்து துவங்க, விருப்பம் தெரிவித்தது.விமான நிலையத்தில் இரவில் விமானத்தை நிறுத்த, வாய்ப்பளிக்கும்படி கோரிக்கை விடுத்தது.இதை ஏற்ற விமான போக்குவரத்து இயக்குனரகம், ஹூப்பள்ளி விமான நிலையத்தில், இலகு ரக விமானத்தை நிறுத்த அனுமதியளித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் வர்த்தக போக்குவரத்தை துவங்கவுள்ளது.விமான சேவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் காப்டன் வருண் சுஹாக் கூறியதாவது:பெங்களூரு, கோவா, மங்களூரு, ஹைதராபாத் உட்பட, பல இடங்களுக்கு ஏர் டாக்சியில் பயணிக்கலாம். எதிர்வரும் நாட்களில், மேலும் பாதைகளுக்கு ஏர் டாக்சி இயங்கும்.தற்போதைக்கு எங்களின் ஏர் டாக்சிகள், ஹூப்பள்ளி – பெங்களூரு இடையே, தொடர்பு ஏற்படுத்தும். நேற்று முதல், போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.இவ்விரு நகரங்களுக்கிடையே சென்று, திரும்ப இரண்டு பயணியருக்கு 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement