அப்பவே அப்படி செஞ்சவர் தானே நீங்க: ஐஸ்வர்யாவை விளாசும் நெட்டிசன்ஸ்

தனுஷை பிரிந்த பிறகு தான் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
.

காபி, புத்தகம், ஒர்க்அவுட் செய்வது எல்லாம் ஐஸ்வர்யாவுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள். அதனால் அது குறித்த புகைப்படங்களை வெளியிடுகிறார்.

மேலும் தான் யாரையாவது சந்தித்தாலும் அந்த புகைப்படங்களை வெளியிடுகிறார். ஆனால் அவர் தன் திருமண வாழ்க்கை பிரச்சனையை மறைத்து சந்தோஷமாக இருப்பது போன்று காட்டவே இப்படி சமூக வலைதளத்தில் நடிக்கிறார் என்கிறார்கள் மூகவலைதளவாசிகள்.

View this post on Instagram A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)
முன்னதாக தனுஷை பிரிவது என்று முடிவு செய்தபோது நடந்த தேசிய விருது விழாவில் அவருடன் கலந்து கொண்டீர்கள். அப்பொழுது தனுஷுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு என் கணவர், பெருமையான மனைவி என்று போஸ்ட் போட்டவர் தானே நீங்கள்.

இளையராஜாவை ஐஸ்வர்யா சந்திக்க தனுஷ் இல்ல ‘இது’ தான் காரணம்
தற்போது தனுஷை கடுப்பேற்ற மற்றும் மகிழ்ச்சியாக இருப்பது போன்று காண்பிக்க நடிக்க வேண்டாம். நீங்கள் நிஜமாகவே சந்தோஷமாக இருந்தால் சரி. ஆனால் நிஜத்தில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் யாரும் உங்களை போன்று செய்ய மாட்டார்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.

புகைப்படங்களில் சந்தோஷத்தை வெளிப்படுத்தாமல் வாழ்க்கையின் நிஜ சந்தோஷத்தை அனுபவியுங்கள் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.