ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் 6,112 கஞ்சா, குட்கா வியாபாரிகள் கைது – டி.ஜி.பி. அறிக்கை

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2 பாயிண்ட் 0 திட்டத்தில் கஞ்சா மொத்த வியாபாரிகளின் 40-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள், சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து டி.ஜி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 15 நாட்களில் கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக 6 ஆயிரத்து 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், திண்டுக்கல், மதுரை, தேனி பகுதிகளில் 16 கஞ்சா மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்கு, கோடிக்கணக்கிலான ரூபாய் மதிப்புடைய வீட்டுமனைகள், சொத்துகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற பகுதி கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்து, வங்கிக் கணக்கு குறித்து அறிக்கையை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.