ஏப்., 30ல் முதல்வர்கள், நீதிபதிகள் மாநாடு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: நீதித்துறை சந்தித்து வரும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கத்தில், மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு, இம்மாதம் 30ல் நடக்கிறது.

மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். கடைசியாக 2016, ஏப்., 24க்கு பின் இந்த மாநாடு நடக்கவில்லை. ஆறு ஆண்டுகளுக்கு பின் வரும் 30ல் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.

latest tamil news

‘விரைவாக நீதி வழங்குதல், கீழமை நீதிமன்றங்கள் மற்றும் 25 உயர் நீதிமன்றங்களில் காலிப் பணி இடங்களை நிரப்புதல், நீதித்துறை உள்கட்டமைப்பு மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட சவால்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும்’ என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.