Baakiyalakshmi Serial Rating : இது என்ன கதையில பெரிய ட்விஸ்ட் கொண்டு வந்துட்டீங்க டைரக்டர் சார்… இதை வச்சி பாக்யாவுக்கு ராதிகாவுக்கும் பிரச்சனை வரப்போகுதா என்று கேட்கும் அளவுக்கு பாக்யலட்சுமி சீரியலில் ஒரு பெரிய ட்விட்டு வரப்போகிறது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. இந்த சீரியலுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு விமர்சகர்களும் வரிசை கட்டி நிற்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் நடக்காது என்று தெரிந்தும் ப்ரமோவில் நடப்பது போன்று காட்சி வைத்து ஏமாற்றுவது மற்ற சீரியல்களை விட பாக்யலட்சுமி சீரியலில் அதிகம்.
மனைவி குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கு தெரியாமல், முன்னாள் காதலி ராதிகாவுடன் பழகி வரும் கோபி இப்போது பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளாரா அல்லது இந்த பிரச்சினைக்கே இவர்தான முதல் காரணமாக என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராதிகாவின் நெருங்கி தோழியான பாக்யா ராதிகா சொன்ன ஆர்டர் காரணமாக அநாதை இல்லத்திற்கு சமைத்து கொடுக்கிறார்.
இந்த சாப்பாட்டை சாப்பிட்ட குழந்தைகள் பலரும் திடீரென மயங்கி விழுவது போல் உள்ளது இதை கேள்விப்பட்ட ராதிகா கோபியுடன் அந்த இல்லத்திற்கு போகிறார். அப்போது போலீஸ் வந்து விசாரிக்கிறது. இந்த விசாரணையில் ஒரு மெஸ்சில் இருந்து சாப்பார்டு ஆர்டர் செய்ததாக கோபி சொல்கிறான்
உடனே போலீஸ் பாக்யா வீட்டிற்கு சென்று அவரை விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர். அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது. நல்லா செய்த சாப்பாட்டில் யார் என்ன கலந்து, ஏன் இப்படி நடக்கிறது என்று புரியாத புதிராக இருந்தாலும், ரசிகர்கள் அனைவரின் சந்தேகமும் கோபி மீது தான் திரும்பியுள்ளது.
https://www.youtube.com/watch?v=1b0AP5oNeCc
ராதிகா எப்போது டீச்சர் டீச்சர் என்று சொல்லி பாக்ய பற்றியே பேசிக்கொண்டிருப்பதால் கோபி இப்படி செய்திருப்பாரா? அல்லது பாக்யா போலீஸ் கேஸ் என்று ஆகிவிட்டால் நாம் ஈஸியாக அந்த வீட்டில் இருந்து வெளியேறிவிடலாம் என்று எண்ணிவிட்டாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எது எப்படியோ அடுத்த வாரம் பாக்ய போலீஸ் ஸ்டேஷன் செல்லும் வாரம். என்ன டைரக்டர் சார் படார்னு இப்படி ஒரு ட்விஸ்ட் கொடுத்துட்டீங்க…
“ “