தற்கொலை செய்து கொண்ட மோனல்: தங்கையின் நினைவு நாளில் உருகிய சிம்ரன்..!

தமிழ் சினிமாவின் பல சகோதரிகள் நடிகைகள் இருந்து வருகின்றனர். ஊர்வசி – கல்பனா, ஷாலினி – ஷமீலி, நக்மா – ஜோதிகா என்று பல சகோதரிகள் சினிமாவில் பிரபலம். அந்த வகையில்
சிம்ரன்
,
மோனல்
சகோதரிகளும் தமிழ் சினிமாவில் பிரபலம். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட தனது தங்கை மோனல் குறித்து சிம்ரம் உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். முன்னனி நடிகர்களான விஜய், தமிழ் விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சிம்ரன். இவரது தங்கை மோனலும் தமிழ் சினிமாவில் நடிகையாக திகழ்ந்தார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “பார்வை ஒன்றே போதுமே ” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து குணாலுடன் பல படங்களில் நடித்தார். மேலும், விஜய்யின் ‘பத்ரி’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக குணாலுடன் பேசாத கண்ணும் பேசுமே படத்தில் நடித்து இருந்தார்.

தனுஷ் பற்றி புது மேட்டர் சொன்ன பிரபல நடிகை: ஷாக்கான ரசிகர்கள்..!

இந்நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார் மோனல். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது தங்கையின் 20 ஆம் ஆண்டு நினைவு நாளில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் சிம்ரன். அதில், நீ இங்கு என்னுடன் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், நாம் எப்போதும் ஒன்றாக தான் இருக்கிறோம். 20 வருடங்கள் ஆனாலும் நீ எனக்குள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறாய். எப்போதும் உன்னை நாங்கள் அனைவரும் மிஸ் செய்வோம் மோனு என்று பதிவிட்டு மோனலுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சிம்ரன். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது எல்லாம் முடியாது… தமிழ் தான் கரெக்ட்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.