நியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு; தகவலுக்கு ரூ.38 லட்சம் பரிசு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நியூயார்க்,-நியூயார்க்கில், சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியநபரின் அடையாளத்தை, போலீசார் கண்டறிந்துள்ளனர்.

latest tamil news

அவர் குறித்து தகவல் கொடுப்போருக்கு, 38 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் அதிகாலை, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், 10 பேர் படுகாயமடைந்தனர். உயிர் பிழைக்க அங்கிருந்து தப்பி ஓடும்போது கீழே விழுந்து, 13 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

latest tamil news

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் அடையாளத்தை, நியூயார்க் போலீசார் கண்டறிந்துள்ளனர். 62 வயதான அந்த நபரின் பெயரை வெளியிடாமல், அவரின் அங்க அடையாளங்கள் குறித்த விபரங்களை மட்டும், போலீசார் வெளியிட்டு உள்ளனர்.அந்த நபர் இருக்கும் இடம் குறித்து தகவல் கொடுப்போருக்கு, 38 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இதுகுறித்த விசாரணையில், அந்த நபர் பொதுமக்களை 33 முறை சுட்டது தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.