#BREAKING || தமிழக ஆளுநருடன்  அமைச்சர்கள் திடீர் சந்திப்பு.!

சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளனர்.

இன்று மாலை ஆளுநர் தேநீர் விருந்து அளிக்கபட உள்ள நிலையில் அமைச்சர்கள் தமிழக ஆளுநரை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீட் விளக்கு மசோதா, மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் வசம் உள்ள நிலையில், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் தர வலியுறுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் அறிவிப்பு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.