“ஆளுநருக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை? மாலைக்குள் பதவி விலகுங்கள்” – அண்ணாமலை காட்டம்

தமிழக ஆளுநருக்கு பாதுகாப்பு வழங்க முடியாத முதல்வர் இன்று மாலைக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சிவந்தி ஆதித்தனாரின் 9 வது நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்…
தமிழக ஆளுநர் மயிலாடுதுறையில் ஞான யாத்திரை தூங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில் திமுகவை சார்ந்தவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் தொண்டர்கள் ஆளுநரின் வாகனம் மீது கல்லை எரிந்து, கருப்புக் கொடியை வீசியிருக்கிறார். தமிழக முதல்வரால் ஆளுநருக்கு கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை எனவே முதல்வர் இன்று மாலைக்குள் பதவி விலக வேண்டும் இல்லையென்றால் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
image
தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கான பாதுகாப்பை பொருத்தவரையிலும் திமுக ஆட்சியில் இந்த 10 மாதங்கள்தான் மிக மோசமான மாதங்களாக இருக்கிறது, ஆளுநரை அவமதித்த விவகாரத்தில் மாநில முதலமைச்சர் கண்ணை கட்டிக் கொண்டு இருக்கிறார். இது தொடர்பாக அவருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போயுள்ளது, ஆளுநருக்கு பாதுகாப்பு நடவடிக்கை ஏன் சரியாக எடுக்கவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும். உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறோம் என்றார்.
விருது வாங்குவதற்காக தான் இளையராஜா இந்தக் கருத்தைக் கூறுகிறார் என்று சீமான் உட்பட அரசியல் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். அவரின் இசை என்பது நம் கடலை போன்று பரந்து விரிந்தது. அதை அழித்து விடாதீர்கள், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். சிலர் அப்பாவை, தாத்தாவை வைத்து தான் அரசியலுக்கு வந்து இருக்கிறார்கள் அதனால் தான் அவர்களுக்கு கோபம் வருகிறது. ஏன் என்றால் அவர்கள் வந்த பாதை அது.
image
மேலும், நான் கருப்புதான் என்று நான் எப்போது சொன்னேனோ அதன் பிறகுதான் அரசியல் டொராண்டோ மாறிவிட்டது. கருப்பு வெள்ளை எல்லாவற்றையும் விட்டு விட்டு தமிழக மக்களுக்கு எது தேவையோ அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.