ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாக திமுக நினைத்தால் நீதித்துறை வாயிலாக கேள்வி கேட்கலாமே தவிர ஆளுநரை அவமானப்படுத்துவதை பாஜக ஏற்றுக்கொள்ளாது என அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக-வின் தொடக்க நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து , கீரைக் கட்டுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.