இறம்புக்கணை பொலிஸ் எல்லைப் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இறம்புக்கணை பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் வாகனங்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பிரதேசத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.