பணக்காரருக்கு சொந்த வீடு இல்லையாம்!| Dinamalar

நியூயார்க் : மொத்தம், 20 லட்சம் கோடி ரூபாய் சொத்துடன், உலகின் மிகப் பெரும் பணக்காரராக விளங்கும், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு சொந்தமாக வீடு இல்லையாம். அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், உலகின் மிகப் பெரும் பணக்காரராக உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய் என, கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:எனக்கென்று சொந்தமாக வீடு இல்லை. பே ஏரியா பகுதியில் தான், டெஸ்லா நிறுவனத்தின் பல மூத்த அதிகாரிகள் வசிக்கின்றனர். அதனால், அவர்களின் வீடுகளில் உள்ள கூடுதல் படுக்கை அறையையே நான் பயன்படுத்துகிறேன். நான் பெரிதாக செலவு செய்வதும் கிடையாது. விமானத்தில் செல்லும் செலவு மட்டும் தான் அதிகமாக இருக்கும்.இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.